மாநாகராட்சியின் பொருந்தா விளக்கம்

சென்னை மாநகராட்சி குப்பை அள்ளும் வண்டியில் சிலுவை போன்ற லோகோ வரையப்பட்ட படம் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால், சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டது. இதனால் வேறு வழியின்றி அந்த வண்டியில் லோகோவை மாநகராட்சி அவசர அவசரமாக மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. பழைய லோகோவை மாற்றி வரைய முயற்சித்தபோது அது சிலுவை போன்று மாறிவிட்டதாக ஒரு பொருந்தாத விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வாகனங்களில் உள்ள லோகாவும் விரைவில் மாற்றி சரிசெய்யப்படும், சென்னை மாநகராட்சியின் வாகனங்களில் மூவேந்தர்களின் சின்னங்களான மீன், புலி, வில் உள்ளடக்கிய புதிய லோகோ இடம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.