மலை முழுங்கி

தென்காசி, கடையத்துக்கு அருகே உள்ள தோரணமலை முருகன் கோயில் பிரசித்தி பெற்றது. இதனருகில் வனத்தையொட்டி, மாதாபுரம் என்ற இடத்தில், மதமாற்றத்திற்கு பெயர் பெற்ற மோகன் சி லாசரஸ் இடம் வாங்கியுள்ளார். அவர் தான் வாங்கியுள்ள இடத்தின் அருகில் உள்ள வனத்துறை நிலங்கள், அருகில் உள்ள மலை என சுமார் 108 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார். அந்த இடத்தில் கிறிஸ்தவ நகரத்தை அமைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். அங்கு ஜெப கூடம், தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த மலையை ஜெபமலை என பெயரிட்டு அங்கு வழிபாடு நடத்தப்படுகிறது என புகார்கள் எழுந்துள்ளன. இதை உடனடியாக தடுத்து நிறுத்த சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.இது குறித்து அரசு விசாரித்து. நடவடிக்கை எடுக்க வேண்டும்.