மற்ற நாடுகளை விட முஸ்லிம் மக்கள் இந்தியாவில் பாதுக்காப்பாக உள்ளனர் – முரளிதர் ராவ்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக, நாகர்கோவிலில், பா.ஜ., சார்பில் நேற்று நடந்த பேரணியில் அதில் முரளிதர் ராவ் பேசியதாவது: ஸ்டாலின் காலை, மதியம், மாலை என பேரணி நடத்தினாலும், சி.ஏ.ஏ., நாட்டை விட்டு போகாது. ராகுல், ஸ்டாலின் மற்றும் சிறு தலைவர்கள், வன்முறையை துாண்டி, மோடி அரசை வெளியேற்றலாம் என நினைக்கின்றனர்; அது நடக்காது.

கடந்த, 1947ல் ஜின்னா காலம் முடிந்து விட்டது. ஜின்னா ஆவி, ஸ்டாலினை பிடித்து ஆட்டுகிறது. அப்போது ஆண்ட நேரு, ஜின்னாவிடம் சரணாகதி அடைந்தது போல் இன்று, பா.ஜ., ஆட்சி செய்யாது.பாகிஸ்தான், ஈரான், சிரியா, துருக்கியில் அதிக முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கின்றனர். ஆனாலும், பா.ஜ.,வால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின், முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார். அவர் சென்னை மேயர் கூட ஆக முடியாது. இலங்கையில், 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க., கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது, தமிழர்களை காக்க தைரியம் இல்லை. தி.மு.க., தமிழ் தமிழ் என்று ஏமாற்றுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

 

Image result for நாகர்கோவில் பாஜக

பேரணியில் கலந்து கொண்ட மக்கள்