மத மாற்றத்தை கண்டித்து மீண்டும் போராட்டம்

மதமாற்றத்தை கண்டித்து, மதுரை அருகே, நேற்றும், போராட்டம் நடந்தது.

மதுரை, பரவை, சத்தியமூர்த்தி நகரில், சிலர், கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி, கிறிஸ்துவ மதக்கூடத்தை மூட வலியுறுத்தி, 21ம் தேதி, அப்பகுதி மக்கள், முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அதிகாரிகள் மதக் கூடத்தை மூடினர்.நேற்று மீண்டும், அங்கு கூட்டம் நடந்ததால், மதமாற்ற முயற்சி நடப்பதாக கருதி, அப்பகுதியினர் திரண்டனர். நீதிமன்ற அனுமதி பெற்று, மதக்கூடத்தில், பிறந்தநாள் விழா மட்டுமே நடந்ததாக, போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் கூறியதை அடுத்து, கலைந்து சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.