மதுரையிலிருந்து மாற்றம்

மதுரை சாலைகளில் யாசகம் செய்த சில திருநங்கைகளை போலீசார் மீட்டனர். அவர்களிடம் விசாரித்ததில் ஒரு திருநங்கை எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் என்பது தெரிய வந்தது. இதனை குறித்து காவல் ஆய்வாளர் கவிதா மருத்துவ கல்லூரியில் விசாரித்தபோது அவர் சொன்னது உண்மை என தெரியவந்துள்ளது.

ஆணாக இருந்தபோது மருத்துவம் படித்த இவர் காலப்போக்கில் அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறியுள்ளார். இதன் பிறகு இவரை வீட்டில் புறக்கணித்துள்ளனர். சமுதாயமும் புறக்கணித்ததால் வேறு வழியின்றி இவர் பிச்சை எடுக்கும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளார். இவருக்கு ஒரு மருத்துவமனையில் வேலைக்கும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.