மதமாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

மதுரை, பரவை, சத்தியமூர்த்தி நகரில், குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிகம் வசிக்கின்றனர். ‘இது, மதமாற்றம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி’ என, அப்பகுதியில், அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.இவர்களை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதாகவும், அவர்களின் குழந்தைகளை புகைப்படம் எடுத்து, ஆதரவற்றவர்களாக சித்தரித்து, இணையதளத்தில் காட்டி, வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இது குறித்து, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி, நேற்று அப்பகுதியினர், கிறிஸ்துவ மதக்கூடத்தை முற்றுகையிட்டனர். கூடுதல், எஸ்.பி., வனிதா உள்ளிட்ட போலீசார் பேச்சு நடத்தியதால், முற்றுகை கைவிடப்பட்டது.