மணிகண்டனின் கைவண்ணத்தில் பாரதமாதா

அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும்வகையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழாவில்  அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், விராலிமலை ஒன்றியம் சூரியர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் முல்லையூரை சேர்ந்த மணிகண்டன் என்ற சிறுவன் களிமண்ணால் பாரதமாதா உருவத்தை தத்ரூபமாக வடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்து முதலிடத்தை பெற்றான்.