மகாராஷ்டிராவில் ஒரு லவ் ஜிஹாத் வழக்கு

மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற ஹிந்து பெண், தனது முஸ்லிம் காதலனால் லவ் ஜிஹாத் மூலம் கடந்த மே மாதம் டெல்லியில் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்டு டெல்லி முழுவதும் வீசியெறிந்த சம்பவம் நாட்டு மக்களிடயேஅ திர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் மற்றொரு முஸ்லிம் நபர் இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி தனது லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து 70 துண்டுகளாக வீசியெறிந்து விடுவேன் மிரட்டிய மற்றொரு லவ்ஜிஹாத் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் துலே பகுதியைச் சேர்ந்த அர்ஷத் சலீம் மாலிக் என்பவருடன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளாமல் லிவ் இன் பார்ட்னராக சேர்ந்து வாழ்ந்துவந்தார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.ஆனால், அவரின் முதல் கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.அந்தப் பெண்ணை முதலில் சந்தித்தபோது அர்ஷத் தன் பெயரை ஹர்ஷல் மாலி என்று ஒரு ஹிந்துவாக அறிமுகப்படுத்திக்கொண்டார். இருவரும் சேர்ந்து துலேயிலுள்ள வனப்பகுதியைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை ரகசியமாக வீடியோ எடுத்துக்கொண்டார் அர்ஷத் சலீம் மாலிக். இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.இதற்காக ஒப்பந்தம் தயாரிப்பதற்காக அமல்னர் என்ற கிராமத்துக்குச் சென்றனர்.அப்போது தான் ஹர்ஷலின் உண்மையான பெயர் அர்ஷத் என்று தெரியவந்தது.ஆனாலும் அவருடன் வேறு வழியின்றி அந்த பெண் சேர்ந்து வாழ முடிவுசெய்தார்.இருவரும் ஒஸ்மனாபாத்தில் வீடு எடுத்துத் தங்கினர்.அதன் பிறகு அந்தப் பெண்ணை முஸ்லிமாக மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்துவந்தார் அர்ஷத்.இது தொடர்பாக அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில், “ஒஸ்மனாபாத்திலிருந்து நான்கு மாதம் கழித்து துலேவுக்கு வந்தோம்.அங்கு வந்ததிலிருந்து என்னை முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி அர்ஷத் கட்டாயப்படுத்தி வந்தார்.அதோடு எனக்கு முதல் திருமணத்தில் பிறந்த குழந்தையையும் மதமாற்றம் செய்ய முயற்சி செய்தார். நான் முஸ்லிம் மதத்துக்கு மாற மறுத்ததால் `டெல்லியில் ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்ததுபோல் உன்னை 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன்’ என்று மிரட்டினார்” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.