போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்: அண்ணாமலை வலியுறுத்தல்

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என பாஜகமாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்துஎக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப் பதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு முறையின்படி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளர்களுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 6 நாட்களாகபோராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடுநடைமுறையை அமல்படுத்து வதில் திமுக அரசு எதற்காகத் தயங்குகிறது என்ற கேள்வி எழுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றுத் திறனாளர்களுக்கான ரூ.1000 உதவித் தொகையை உயர்த்துவதாக அறிவித்தது முதல், பல மாவட்டங்களில் உதவித் தொகை வழங்கப்படவே இல்லை என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது. உடனடியாக, பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 1-க்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களைவிட அடிப்படை ஊதியம் ரூ.3,170 குறைவாக வழங்கப்படுவதை எதிர்த்து, சம வேலைக்கு சம ஊதியம் கோரி பல ஆண்டுகளாக தமிழகப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திமுக, 2021 தேர்தலின்போது இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. ஆசிரியர்கள் போராட்டத்தால்தமிழகம் முழுவதும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள் ளது. உடனடியாக, ஆசிரியர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.