பொய்சொல்லும் மமதா

மேற்குவங்க முதல்வரான, மமதா பேனர்ஜி, வரும் தேர்தலில் தோற்றுவிடுவோம் என பயத்தில் உளறிக்கொட்ட ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் ‘ஏன் கிறிஸ்துமஸுக்கு தேசிய விடுமுறை விடப்படவில்லை, அதை ஏன் பா.ஜ.க அரசு திரும்பப் பெற்றது’ என கேட்டு மக்களை குழப்பியுள்ளார். பா.ஜ.க அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இன்றுவரை தீபாவளி, ஈத், புத்த பூர்ணிமா போன்று கிறிஸ்துமஸும் அரசு அறிவித்துள்ள விடுமுறையாகத்தான் தொடர்கிறது. இப்படி அப்பட்டமாக பொய் பேசுவது ஒரு மாநில முதல்வருக்கு அழகல்ல என பொதுமக்கள் கருதுகின்றனர்.