பேராயர் எஸ்றா சற்குணம் மீது டி.ஜி.பி-யிடம் பா.ஜ.க புகார்

பிரதமர் மோடியை அவதுாறாகவும், தரம் தாழ்ந்தும் பேசியதாக, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர், பேராயர் எஸ்றா சற்குணம் மீது, டி.ஜி.பி -யிடம், பா.ஜ.க புகார் அளித்துள்ளது.

கடந்த, 2ம் தேதி, தனியார், ‘டிவி’ சேனல் ஒன்றின் நேர்காணலில், பிரதமர் மோடியை அவதூறாகவும், தரம் தாழ்ந்தும், பேராயர் எஸ்றா சற்குணம் பேசியது, சமூகவலை தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி, ஆன்லைன் வாயிலாக, டி.ஜி.பி.,க்கு புகார் அனுப்பியுள்ளார். புகார் மனுவை ஏற்றதற்கான ரசீதை, அபிராமபுரம் போலீசார், நேற்று நாராயணன் திருப்பதியிடம் வழங்கினர்.

”எஸ்றா சற்குணம் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.ஏற்கனவே, ‘ஹிந்து மதத்திற்கு எதிராக பேசி வன்முறையை துாண்டுகிறார்’ என, எஸ்றா சற்குணம் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர் என்று நாராயணன் திருப்பதி கூறினார்.