புலம்பும் உத்தவ் தாக்கரே

உத்தரபிரதேச முதல்வர் இன்னும் சில நாட்களில் மகாராஷ்டிரா செல்லப்போகிறார். அவர் அங்குள்ள டாடா, எல்&டி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்திக்கிறார். அவர்களை உ.பியில் தொழில் துவங்க, முதலீடுகள் செய்ய அழைப்பு விடுக்கிறார். மேலும், ரந்தீப் ஹூடா, சுபாஷ்கை, போனிகபூர் உள்ளிட்ட திரைத் துறையினரையும் சந்திக்கிறார். ஏற்கனவே உ.பியில் பாரதத்தின் பெரிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என அறிவித்தார் யோகி. தற்போது தொழில்துறையினரையும் அவர் ஈர்க்க முயற்சிப்பதால் புலம்ப ஆரம்பித்துள்ளார் உத்தவ்.