புத்தக வெளியீடு

விஸ்வ சம்வாத் கேந்திரம் சார்பில், ‘தி தமிழ் வீக்’ என்ற ஆங்கில வார இதழ் தனிச்சுற்றாக வெளியாகிறது. இதனை மதுரையில் நடைபெற்ற விஸ்வ சம்வாத் கேந்திரத்தின் ‘ஸ்ரீ நாரதர் விருது’ வழங்கும் நிகழ்ச்சியில் எழுத்தாளரும் தன்னம்பிக்கை பேச்சாளருமான முனைவர் கு. ஞானசம்பந்தன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தமிழக கேரள மக்கள் தொடர்பு அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர், மெட்ரோ மோகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தனர். இதனையடுத்து இந்நிகழ்ச்சியில் விஜயபாரதம் வார இதழின் தீபாவளி மலர் வெளியிடப்பட்டது.