புகையும் வடகிழக்கு

பங்களாதேஷ் நாட்டிலிருந்து ஊடுருவிய முஸ்லிம் அசாம் மாநிலத்தின் அடையாளம் மாறிவிட்டது என்றும், அசாமிய மக்களின் உரிமைகள் பறிபோய்விட்டன என்றும் குரல் கொடுத்த அசாம் பரிஷத் கூட, எதிர்ப்புத் தெரிவிப்பது வேதனை.

குடியுரிமை மசோதாவுக்கு முஸ்லிம் அமைப்புகள் ‘மொகல்ஸ்தான்’ என்ற ஒரு புதிய முஸ்லிம் நாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளன.  வடகிழக்கு எல்லை மாநிலங்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் தொடர்பு ஏற்படுத்தக் கூடிய வழிக்கு சிலிகுரி காரிடார் என்று பெயர் வைத்துள்ளார்கள்.  இந்த வழியை அடைத்து விட்டால், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு செல்வதை தடுத்து, வடகிழக்கு எல்லை மாநிலங்களைக் கட்டுப்படுத்த முஸ்லிம் ஊடுருவ வேண்டும் என்பது திட்டம். இத்திட்டத்தின் அடிப்படையில் பங்களாதேஷ் நாட்டிலிருந்து அதிக அளவு முஸ்லிம்கள் ஊடுருவியுள்ளார்கள்.  1992-ல் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி சுமார்  ௧.௫ கோடியிலிருந்து 2 கோடி முஸ்லிம் ஊடுருவியுள்ளார்கள். ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் 40 லட்சம் பேர்கள் மட்டுமே, தங்களின் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. இதுவே அபாய அறிகுறி. ஏன் என்றால் சுமார் 1 கோடி பங்களா தேஷ் முஸ்லிம்கள் குடியுரிமை பெற்றவர்களாக மாறி விட்டார்கள். அசாம் காஷ்மீர் ஆகாமல் இருக்குமா? எவ்வாறு காஷ்மீரில் மசூதிகளும், மதரஸாக்களும் பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஊட்டி வளர்க்கின்றனவோ!? அதேபோல் அசாம் பகுதிகளிலும் நடைபெறுகிறது.  லோயர் அசாமில் அதிக அளவில் மசூதிகளும் மதரஸாக் களும் உருவாகியுள்ளன. ஜின்னாவின் தனிச் செயலாளர் மனுல் ஹக் சௌத்திரி ஜின்னாவிற்கு எழுதிய கடிதத்தில், “காயிதே ஆஸம்,” இன்னும் 30 வருடத்தில் அசாம் பாகிஸ்தான் வசம் வந்துவிடும், இந்த விளையாட்டிற்கு, வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில் அதிக அளவு கிழக்கு பாகிஸ்தான் முஸ்லிம் ஊடுருவ முயற்சிகள் நடைபெறுகின்றன என எழுதியுள்ளார்.

ஊடுருவிய முஸ்லிம்களால், அசாம் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில் ஆறு மாவட்டங்கள் முஸ்லிம்களின் கட்டுப்பாட் டிற்குள் சென்று விட்டன. நாகோன், பார்படா, கோபால்புரா, கரீம்கஞ்ச், துப்ரி உள்ளிட்டவை. 126 சட்ட மன்ற தொகுதிகளில் 54ல் முஸ்லிம் வாக்குகளே தேர்தல் முடிவை நிர்ணயிக்கும். இதை தடுப்பதற்குத் தான் குடியுரிமை திருத்த மசோதா.

அசாமில் ஊடுருவிய முஸ்லிம்களால் ஏற்படும் ஆபத்தை மறைக்க,  உள்ளுர் மக்களை திசை திருப்ப குடியுரிமை (திருத்தம்) 2016 சட்டம் பற்றிய தவறான பிரச்சாரத்தால் அசாம், மேகாலயா, திரிபுரா போன்ற எல்லைப்புற மாநிலங்களில் ஆர்பாட்டம், போராட்டங்கள் நடைபெறுகின்றன.