பா.ஜ.,வில் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்

 பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (29) இன்று பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.

இந்தியாவில் அதிகம் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழும் அரியானா மாநிலத்தை சேர்ந்த சாய்னா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட பல விளையாட்டுத்துறை விருதுகளை பெற்றுள்ளார். 24 க்கும் அதிகமான சர்வதேச பாட்மிண்டன் பட்டங்களை பெற்றவர். லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர்.பிரதமர் மோடியை புகழ்ந்து அவ்வப்போது டுவீட் செய்து வரும் சாய்னா, தான் பா.ஜ.,வில் இணைய உள்ள தகவலையும் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து டில்லியில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் பா.ஜ., நிர்வாகிகள் முன்னிலையில் சாய்னா கட்சியில் இணைந்துள்ளார்.

பிரதமர் மோடியை புகழ்ந்து அவ்வப்போது டுவீட் செய்து வரும் சாய்னா, தான் பா.ஜ.,வில் இணைய உள்ள தகவலையும் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து டில்லியில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் பா.ஜ., நிர்வாகிகள் முன்னிலையில் சாய்னா கட்சியில் இணைந்துள்ளார்.

பிரதமர் உழைப்பு பிடித்தது

பின்னர் செய்னா நேவால் நிருபர்களிடம் கூறியதாவது: இரவு , பகல் பாராமல் பிரதமர் உழைப்பது எனக்கு பிடித்திருந்தது. நாட்டிற்காக நல்லது செய்ய விரும்பினேன். பா.ஜ., தான், நாட்டிற்கு நல்ல பணிகளை செய்கிறது. கட்சியில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.