பார்வையற்றவர்களுக்கு இலவச சாவாரி

உலகில் பார்வையற்றவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகும் சமூகங்களில் ஒன்றாக உள்ளனர். இவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியாக ரூ. 25 லட்சம் மதிப்புடைய 12,000 இலவச சவாரிகளை தர ஊபர் கால் டாக்ஸி நிறுவனம் முன் வந்துள்ளது.

டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்த திட்டத்தை ‘நேஷனல் அசோசியேஷன் பார் பிளைண்ட்’ www.nabindia.org அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.