பாரத செயல்பாடுகளுக்கு பாராட்டு

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் பொருளாதார விளைவுகளைச் சமாளிக்க மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்ததற்காக பாரத அரசை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா பாராட்டினார். இவ்வளவு பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு தேசம் வெற்றிகரமாக பொதுமுடக்கத்தை கட்டுப்பாட்டோடு நடத்தியது, அதேசமயம் வளர்ச்சி, கட்டமைப்பு சீர்திருத்தங்களையும் மோடி அரசு கைவிடவில்லை, சிறப்பாக செயல்படுத்தியது என அவர் தன் வியப்பை தெரிவித்தார். மேலும் தொற்றுநோயைக் கையாள்வதற்கும் அதன் பொருளாதார விளைவுகளைச் சமாளிப்பதற்கும் பாரதம் உண்மையில் மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாரதம் உலகிற்கு மேலும் பல நன்மைகளை செய்ய வேண்டும் என ஜா ர்ஜீவா கூறியுள்ளார்.