பாதிரி அபகரித்த நிலம்

சென்னை, சேலையூரை சேர்ந்தவர் சரவணபெருமாள், தனஞ்செயன், தனசேகர், தசரதன் ஆகியோருக்கு சொந்தமான ரூ. 12 கோடி மதிப்புள்ள 8,063 சதுர அடி நிலத்தை சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரி ஜான் வெங்கடேசன் என்பவர், 1980ல் வாடகைக்கு பெற்று ஜெபக்கூடம் அமைத்தார். பிறகு மொத்த இடத்தையும் அபகரித்து கொண்டார். இதனையடுத்து சரவணபெருமாள் சகோதரர்கள் குடும்பத்தினர், தங்கள் நிலத்தை பாதிரியிடம் இருந்து மீட்டுதரக் கோரி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு, டி.ஜி.பி அலுவலகங்களுக்கு மனு கொடுத்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முட்டி போட்டபடி முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு நகர்ந்து சென்று மற்றொரு மனு அளித்தனர். மேலும் பாதிரி ஜான் வெங்கடேசனுக்கு ஆதரவாக காவல்துறையினர் தங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதால் சென்னை காவல்துறை ஆணையர் நேரடி பார்வையில், சி.பி.சி.ஐ.டி மூலம் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.