பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் மென்தார் செக்டார் அருகே உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:30 மணி அளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பிலிருந்து தக்க பதிலடி தரப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர் என்று வெளியுறவுத்துறை செயலர் ரவீஷ்குமார் தெரிவித்தார் மேலும் இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதிநிதிகளை பலமுறை அழைத்து கண்டனம் தெரிவித்ததாக அவர் கூறினார்