பரதன் பதில்கள்

திருவண்ணாமலை  கிரிவலம்  சிறப்பென்ன?

– எஸ். ரகுபதி, திருவாதவூர்

நினைத்தாலே முக்தி தரும் தலம். பஞ்ச பூதங்களில் இது அக்னித் தலம். மலையே சிவன் வடிவம். பௌர்ணமியன்று மலையைச் சுற்றி 14 கி.மீ. நடந்து வருவதுதான் கிரிவலம். ஒரு முறை சென்றுதான் வாருங்களேன்…

 

 

ஏசுவின் ரத்தம் உன் பாவங்களை சுத்திகரிக்கும் என்கிறார்களே?

– வி. சுந்தரமூர்த்தி, காரைக்குடி

நமது பாவங்கள் இருக்கட்டும். கிறிஸ்தவ பாதிரிகள் செய்து வருகிற பாவங்களை சுத்திகரிக்க ஏசுவின் ரத்தத்தால் அபிஷேகம் செய்தாலும் போதாது.

.

கம்யூனிஸ்டுகள்   வரிந்து  கட்டிக் கொண்டு   ஆர்.எஸ்.எஸ்ஸை  எதிர்ப்பது   ஏன்?

– டி. சுரேந்தர், திருமங்கலம்

ஆர்.எஸ்.எஸ். – துவங்கியது. 1925-ல். அதே ஆண்டில்தான் இந்தியாவில் கம்யூனிசமும் துவங்கியது. ஹிந்துத்துவமும் தேசியத்துவமும் இருக்குமிடத்தில் கம்யூனிஸம் வளர முடியாது. ஆர்.எஸ்.எஸ். வளர வளர கம்யூனிசம் காணாமல் போய்விடும்.

 

 

*அப்துல்கலாம்  ஒரு   முஸ்லிமே  இல்லை  என்கிறாரே… ஜெய்னூலாபுதீன்?

– கே. அன்பரசன், திப்பிராஜபுரம்

‘அல்லா’ ஒருவரே கடவுள். ஒரு முஸ்லிம் அல்லாவைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது. குர்ஆனைத் தவிர வேறு எந்த நூலும் புனிதம் கிடையாது… ‘எம்மதமும் சம்மதம்’ என்று எந்த முஸ்லிமும் கருதக் கூடாது. இதுதான் இஸ்லாம். அதனால் அவர்கள் பார்வையில் அப்துல்கலாம் முஸ்லிமே இல்லை. அதுசரி… மதச்சார்பின்மை பேசுகிற முட்டாள் தலைவர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லையே!

 

அயோத்தியில்  ராமர்  கோயில்  கட்ட  ஷியா  வக்ஃப்  வாரியம்   சம்மதம் தெரிவித்து   மனு  தாக்கல்   செய்துள்ளது   பற்றி?

– ப. மல்லிகா, ஜரத்தல்

வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. தீர்ப்பு நமக்கு சாதகமாக வரவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

 

 

* விஜய்  டி.வி. யின்  பிக்பாஸ்   நிகழ்ச்சி  பற்றி?

– குரு. சுப்ரமணியம், வாழப்பாடி

குடி குடியை கெடுக்கும். விஜய் டி.வி. குடும்பத்தையே கெடுக்கும்.

 

இந்தியாவில்  முஸ்லிம்கள்  பாதுகாப்பற்ற   உணர்வுடன்    இருப்பதாக    அன்சாரி   கூறியது   பற்றி?

ப.சரஸ்வதி, கொளத்தூர்

சொன்னது சாதாரண அன்சாரி இல்லை. நேற்றுவரை அவர் துணை ஜனாதிபதி. ஓய்வுக்குப் பிறகு காங்கிரஸில் அடைக்கலம் தேட அச்சாரம் போடுகிறார் என்றே தோன்றுகிறது. உலகிலேயே முஸ்லிம்கள் ஜாம்ஜாம் என்று இருப்பது இந்தியாவில் மட்டுமே.