பயப்படும் கே.சி.ஆர்

பிரதமர் நேற்று தெலுங்கானா சென்றபோது அவரை வரவேற்க அம்மா நில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் செல்லவில்லை. இதுகுறித்து பேசிய பா.ஜ.க எம்.எல்.சியான என் ராம்சந்தர் ராவ், ‘பிரதமர் அல்லது ஜனாதிபதி விமான நிலையத்திற்கு வந்தால், அம்மாநில முதல்வர் அவர்களை வரவேற்க வேண்டும், இது ஒரு மரபு. இந்த மரபை முதல்வர் மீறுவது சரியல்ல. பிரதமரை மதிக்க வேண்டும், அவர் பா.ஜ.கவினருக்கு மட்டுமல்ல நாட்டிற்கே பிரதமர். கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக இப்படி அவர் நடந்துள்ளார், தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் பிரதமரை எதிர்கொள்ள பயப்படுகிறார்.’ என தெரிவித்தார்.