பயங்கரவாதிகளுக்கு பதிலடி

இரு தினங்களுக்கு முன், காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் 14 அமெரிக்க ராணுவத்தினர் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் ஆற்றிய உரையில் பயங்கரவாதிகளுக்கு அமெரிக்க ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார். அதற்கேற்ப, கிழக்கு ஆப்கன் பகுதியில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பயங்கரவாத தளபதி ஒருவர் உட்பட பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூல் விமான நிலையம் அருகே யாரும் வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.