நேர்மறை அலைகள்

சமீபத்தில் ஒரு நண்பரை சந்திக்க சென்ற போது அவர் சொன்ன விஷயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவர் ஒரு ஜோதிடர் அவருக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உண்டு. ஆழமாக ஜாதகம் கணிப்பவர். நேரடியாக பட்டவர்த்தமாக பலன்களை தெளிவாக கூறுவார். ஒளிவு மறைவு இல்லாமல் ஜாதகத்தில் உள்ளது உள்ளபடி சொல்லுவார். சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய மகள் ஜாதகம் பற்றி கேட்க வந்தார். அவருடைய மகள் சில காலம் முன்பு வரை மிகுந்த தெய்வ பக்தி உள்ளவளாக இருந்ததாகவும், ஹனுமான் சாலிசா சொல்லாமல் வெளியே செல்லமாட்டாள் என்றும் கூறினார். பிளஸ் டூ படிக்கும் அந்த மாணவி தற்போது பூஜை அறைக்கு வருவதையே தவிர்ப்பதாகவும், நமது தெய்வங்களின் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறி உள்ளார். பரிதவிப்போடும் கவலையோடும் அந்த வாடிக்கையாளர் இவரிடம் ஆலோசனைக்கு வந்தார். ஜாதகத்தை பார்த்த நமது நண்பர் ஒன்றும் செய்ய முடியாது என்று பளிச்சென்று கூறியுள்ளார்.

என்ன நடந்தது வீட்டில் என்று வினவினார் ஜோதிடர். வாடிக்கையாளர் வீட்டில் சில சண்டை சச்சரவுகள் எல்லார் வீட்டில் நடப்பது போல் நடந்துள்ளது என்று கூறியுள்ளார். அதே சமயம் அவருடைய மகள் பிளஸ் டூ வில் நல்ல மார்க் எடுத்து முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்று ஒரு டியுஷன் சென்டரில் சேர்த்துள்ளார். நன்கு படிக்கும் அவர் மகள் இரண்டாவது ரேங்கில் இருந்து முதல் ரேங்க் வாங்கியுள்ளார். டியுஷன் வகுப்பு ஒரு மணிநேரம் மட்டுமே, ஆனால் அந்த டியுஷன் மாஸ்டர் டியுஷன் நேரத்திற்கு பிறகு அந்த மாணவியிடம் அவர்கள் குடும்பத்தை பற்றி விசாரித்துள்ளார். தினசரி இது நடந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக அவர் மகளை கிறிஸ்துவ போதனை செய்துள்ளார். ஏசுவால் குடும்ப பிரச்சனை தீரும் என்றும் நல்ல மார்க் ஏசுவால் கிட்டியது என்றும் மூளை சலவை செய்துள்ளார் என்று தெரியவந்தது. ஜாதக கோளாறால் இது நடந்ததா என்று கேட்பதற்காக நண்பர் வந்துள்ளார். ஜோதிடர் ஜாதகத்தில் தோஷம் இல்லை ஆனால் இதை சரி செய்ய முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார்.

அந்த வாடிக்கையாளருக்கு நம்முடைய கார்யகர்த்தர் ஜோதிடர் மீது நம்பிக்கை அதிகமாகி உள்ளது. அதனால் என்னவெல்லாம் செய்ய சொன்னாலும் செய்ய தயாராக இருந்தார். நேர்மையான நமது கார்யகர்த்தர் பணம் பறிக்காமல் அவருக்கு எளிமையான பரிகாரம் சொல்லி உள்ளார்.

மிகவும் எளிது. ஜோதிடர் தினசரி எதாவது ஒரு நேரத்தில் காலையோ மாலையோ அல்லது இரு வேலைகளிலும் கந்த சஷ்டி கவசத்தை மெல்லியதாகவோ அனைவரும் கேட்கின்ற சப்தத்தில் ஒழிக்க செய்யுங்கள் என்று அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதிசயம் நடந்தது. ஆமாம் அதிசயமே. நமது முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்பது மீண்டும் நிரூபணம் ஆனது. சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த வாடிக்கையாளர் ஓடியோடி சந்தோசத்துடன் அவருடைய மொத்த குடும்பத்தையும் அவர் மகளையும் சேர்த்து அழைத்து வந்து இனிப்பு வழங்கி அதிசயத்தை பகிர்ந்துகொண்டார். அவருடைய மகள் மீண்டும் நமது தெய்வத்தின் மீது பக்தியுடன் வழிப்பட ஆரம்பித்து உள்ளார்.

எப்படி இது நடந்தது என்று நான் கேட்டேன். ஜோதிடர் கூறினார் இது ஒன்னும் பெரிய விசயமே இல்லை. நம்மை சுற்றி ஒரு பாசிட்டிவ் அலைகள் இருந்தால் சூழ்  நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். தொடர்ந்து இந்த பாசிட்டிவ் அலைகள் வீடுகளில் இருக்கும் போது எந்த ஒரு தீய சக்தியும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. கந்த சஷ்டிக்கு அப்படி ஒரு சக்தி உள்ளது. என்றும் நமது ஸ்லோகங்கள் பாசிட்டிவ் அலைகளை ஏற்படுத்தும் என்று கூறினார். என்னுடைய பிரச்சனைக்கும் இந்த பரிகாரமே கூறினார். “எல்லா பிணியும் எந்தனை கண்டால் நில்லாதோட நீ எனக்கருள்வாய்” என்று பக்தியுடன் கந்த சஷ்டி கவசத்தை பாடவோ கேட்கவோ வேண்டும். “பெண்களை தொடரும் பிரும்ம ராட்சதரும் (பாதிரி பாஸ்டர்) அடியனை கண்டால் அலறி கலங்கிட” என்கிற வரிகளை கேட்கும்போது தீய சக்திகள் நம்மை விட்டு அகலும். இவை நிதர்சனமான உண்மை என்பது கண்கூடு.

                                                                                                               – ராகவன்.RSS.CHENNAI