நெல்லை கண்ணனை எதிர்த்து பாஜகவினர் தர்ணா

நெல்லை கண்ணன் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை வன்மையாக தாக்கி SDPI என்ற முஸ்லிம் அமைப்பு பொதுகூட்டத்தில் பேசி இருந்தார். அதில் நெல்லை கண்ணண் மக்களை நாய்கள் என்றும், நீங்கள் (முஸ்லீம் மக்கள்) அவனுடைய (பிரதமர், உள்துறை அமைச்சர்)  சோழியை முடிப்பீர்கள் என்று எதிர்பாக்கிறேன் ஆனால் ஏன் இன்னும் செய்யவில்லை என்று கேக்குகிறார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சிபி.ராதாகிருஷ்ணன், நரேந்திரன் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். அவர்களை காவல்துறை கைது செய்தது.