நூல் வெளியீட்டு விழா

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் சர்.சி.வி. ராமன் பிறந்த இடத்தில் 75வது சுதந்திரதின விழாவும் மண்ணின் மைந்தன் சர்.சி.வி.ராமன் புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச்செயலாளர் கோ.ஸ்தானுமாலயன் புத்தகம் வெளியிட்டார். அதனை தினமலர் ஆசிரியர் முனைவர். ராமசுப்பு பெற்றுக்கொண்டார். ராமன் ஆராய்ச்சி நிலையத்தின் முன்னால் ஆராய்ச்சியாளர் பி.என். ராமசந்திரன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.