நீட் முடிவுகள் தரும் செய்தி

மேடைகளில், தொலைகாட்சி. விவாதங்களில் ‘ராஜன் குழு’ அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களைப் பொடிப்பொடியாக்கி இருக்கிறது சமீபத்தில் வெளியான நீட் முடிவுகள்.

பொய் 1: நீட் தேர்வு சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு சாதகமானது?.

உண்மை: இந்தாண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு 22 மாநில போர்டுகளில் படித்தவர்கள்.

பொய் 2: அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்.

உண்மை: திருச்சியில் மட்டும், அரசு நடத்திய பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 62 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்கின்றனர்.

பொய் 3: அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் முறையில் நீட் தேர்வில் தகுதி பெற முடியாது.

உண்மை: அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.

பொய் 4: கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு.

உண்மை: கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பனூர் என்ற கிராமத்தில் +2 தேறிய பெண் எம். சங்கவி. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவர் இந்தாண்டு 202 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றுள்ளார். அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பொய் 5: தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமானது.

உண்மை: கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 57 216 பேர். இந்த ஆண்டு 58,922 பேர்.

இதனால் அனைவரும் அறிய வேண்டியது, முனைப்போடு உழைத்தால் எவரும் நீட்டில் தகுதி பெறலாம். நாம் நீதிமன்றத்தில் இந்த தரவுகளை எடுத்து வைத்து நீட் எவருக்கும் எதிரானது அல்ல என்று நிறுவ வேண்டும். உண்மைகளை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

(மாலனின் பதிவில் இருந்து)