நிவாரணத்தொகை நிறுத்தம்

சில நாட்களுக்கு முன் டெல்லியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், அந்த சிறுமியின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடுத் தொகையான ரூ. 10 லட்சத்தில் இடைக்கால நிவாரணமாக ரூ. 2.5 லட்சத்தை இழப்பீட்டுத் தொகையாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  இவ்வழக்கில் ஒரு முக்கியத் திருப்பமாக, அந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனையடுத்து அந்த இடைக்கால நிவாரணத்தை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.