நினைவிருக்கட்டும்… தீபாவளி மலர்

அன்புடையீர், வணக்கம்.

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பாகவத், நாகபுரி விஜயதசமி விழாவில் பேசிய உரை இந்த இதழில் வெளிவந்துள்ளது.

தீபாவளி மலர் 13.10.2017 அன்று சென்னை எழும்பூர் தபால் நிலையம் மூலம் சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும். தீபாவளிக்கு முன்பே உங்களுக்கு மலர் கிடைத்துவிடும். சில ஊர்களில் தபால்காரரோ, தபால் அலுவலகத்திலோ ஏனோ கொடுக்கத் தவறி விடுகின்றனர். அதனால் இப்போதே உங்கள் தபால்காரரிடம் 450 பக்கங்கள் இருக்கிற ஒரு புத்தகம் வரும் என்று சொல்லி வையுங்கள். அப்படியும் மலர் கிடைக்கவில்லை எனில், தபால் நிலையத்தில் எழுத்து பூர்வமாக ஒரு புகார் தெரிவியுங்கள்.

மேற்படி விபரங்களை விஜயபாரதத்திற்கு தெரிவித்தால் உங்களுக்கு மற்றொரு மலர் அனுப்பி வைக்கிறோம்.

கடந்த வார இதழில் அட்டைப்படக் கட்டுரையாக ஆங்கிலேயன் சென்னையில் ஒரு பெருமாள் கோயில், ஒரு சிவன் கோயில் இரண்டையும் இடித்துவிட்டு, அதே இடத்தில் தான் இப்போது இருக்கும் உயர் நீதி மன்றத்தைக் கட்டினான் என்று செய்தி வெளியாகியது. நமது கட்டுரை செய்தியை உறுதிபடுத்தும் வகையில் ஹிந்து விரோத கருத்துகளை பரப்பும் ‘தமிழ் தி இந்து’ செப்டம்பர் 23, 2017 இதழிலும் மேற்கண்ட செய்தி பிரசுரமாகியுள்ளது.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

 

வாழி நலம் சூழ.

ம. வீரபாகு,  ஆசிரியர்

 

One thought on “நினைவிருக்கட்டும்… தீபாவளி மலர்

  1. விளம்பர செய்ய கட்டண்ங்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
    உடனே பதில் அஞ்சலில் அனுப்பி வைக்கவும்.

Comments are closed.