நாளை பூமி கண் காணிக்க செயற்கை கோள் அனுப்ப படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது.
இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் நாளை (புதன்கிழமை) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக் கட்ட பணியான ‘கவுண்ட்டவுன்’ இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது.
மற்ற நாடுகளின் ராக்கெட் மூலம் இந்திய செயற்கை கோள் ஏவிய காலம் மலை ஏறி தற்போது இந்திய ராக்கெட்டில் மற்ற நாடுகளின் செயற்கை கோள் பொருத்தி விண்வெளிக்கு அனுப்ப படுகிறது. இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கை கோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.