நல்லதைப் பாராட்டுவதும் நமது பணியே!

அன்புடையீர், வணக்கம்.

ஹிந்து விரோத, மோடி விரோத சாய்வு இல்லாமல் செய்தி வெளியிடுவதில்லை என்று கங்கணம் கட்டியுள்ள தமிழ் நாளிதழ் உள்ளிட்ட சென்னை ஊடகம் இம்முறை பொதுவாக ஆர்.எஸ்.எஸ்., சேவாபாரதி வெள்ள நிவாரணப் பணி பற்றி செய்தி வெளியிட வேண்டியதாகிவிட்டது. சங்க நற்பணி அந்த அளவுக்கு நடுநாயகமாகியுள்ளது. அதே சமயம் இந்த சூரியனை மறைக்கும் ராகு கேதுக்களாக கம்யூனிஸ்டு, நக்ஸல்களும் திராவிடர் கழகத்தினரும் திட்டமிட்டு பத்திரிகை நிர்வாகத்தில் ஊடுருவி, அதைத் தங்களது பிரச்சாரக் கருவியாகி வைத்திருப்பதும் மறப்பதற்கில்லை.

வாசகர்கள் தவறான செய்திகள் வரும்போது, தங்கள் கண்டனங்களைக் கடிதங்களாக எழுதி திருத்துவது போலவே சங்கத்தின் தேசிய நற்பணி செய்திகளை வெளியிட்டதற்காக மகிழ்ச்சி தெரிவிப்பதும் முக்கியம்.

தேசிய சிந்தனையில் நம்பிக்கையுள்ளவர்கள், பத்திரிகைத் துறையில் பங்கேற்க வேண்டும். அதற்காக, விஜயபாரதம், இதழியல் பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது. ஆர்வமிருப்போர், அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.

‘விஜயபாரதம்’ என்பது வெறும் பத்திரிகை மட்டுமல்ல. இது ஓர் இயக்கம். தேச விரோத, பிரிவினைவாத இயக்கங்களின் முகமூடிகளைக் கிழித்தெறியும் போர் முரசு. நீங்கள் மட்டும் படித்தால் போதுமா? உங்கள் நண்பர்கள், உறவினர்கள் 5 பேரை சந்தாதாரர்களாக சேர்த்துத் தாருங்களேன். அப்படிச் சேர்த்துக் கொடுத்தால் அது உயர்ந்த தர்மம். உங்களுக்கு புண்ணியமும் கிடைக்கும்.