நடிகை கவுதமி புகாரில் தலைமறைவானவர் கைது

நடிகை கவுதமியின் சொத்தை விற்று பண மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நடிகை கவுதமி தனக்கு சொந்தமான நிலத்தை அதிக விலைக்கு விற்று தருவதாக மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் தலைமறைவாக இருந்த பலராமன் என்பவரை கைது செய்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் சுமார் 8.53 ஏக்கர் நிலத்தை ரூ. 16 கோடிக்கு விற்பனை செய்துவிட்டு தனக்கு வெறும் ரூ. 4.10 கோடி கொடுத்து ஏமாற்றியதாக கவுதமி புகார் அளித்திருந்தார்.