நடக்க இருந்த மாநிலங்கவை தேர்தல் ஒத்திவைப்பு

மாநிலங்கவை தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கான தேர்தல் போட்டியின்றி நடந்து முடிந்து விட்டன.

ஆனால் ஆந்திரா, குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகலயா, ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களில் மொத்தம் 18 இடங்களுக்கான தேர்தலில் போட்டி உள்ளதால் வரும் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்க இருந்தது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கிற வகையில் நாடு முழுவதும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாநிலங்களவை தேர்தல் நடக்கவிருந்த ஆந்திரா, குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகலயா, ராஜஸ்தான் மாநிலகளில் முழுமையான மூடலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாரும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக இந்த மாநிலங்களில் நடைபெறவிருந்த மாநிலங்களவை தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்திவைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது.