தோட்டம் அமைக்க ராணுவம்

சுற்றுச்சூழலை காக்கும் முயற் சியாக, உள்துறை அமைச்சகம்  சார்பில் 6,000 ஏக்கரில் மரங்கள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தேசத்தை காக்க தங்கள் இன்னுயிரை தந்த ராணுவ வீரர்கள் நினைவாக ராணுவத்தினர் தோட்டங்களை அமைக்க வேண்டும். அதில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களுடன், துப்பாக்கி தலைக்கவசம் வைத்து நினைவு சின்னம் ஏற்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.