தேர்தல் தரும் செய்தி

சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில், பா.ஜ.க 29,478 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியினர் அனைவரும் சேர்ந்து 24,560 இடங்களில் வெற்றி பெற்றனர். கிராம மக்கள் பா.ஜ.கவுக்கு ஆதரவாக உள்ளனர், விவசாய சட்டத்தால் நன்மை நடக்கும் என நம்புகின்றனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளன. அதே சமயம், பயங்கரவாத ஆதரவு கட்சியான எஸ்.டி.பி.ஐ சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு அவர்கள் பாரதத்திற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதற்காக 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது போன்ற தேசத்திற்கு விரோதமானவர்கள் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்கப் பட வேண்டும்.