தேசியக்கொடி அவமதிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக்கொடி தினசரி ஏற்றப்படுகிறது. நேற்று காலை ஏற்றப்பட்ட தேசியக் கொடியின் மேல் பகுதியின் முடிச்சு, இறுக்கமாக கட்டப்படாததால் அவிழ்ந்துவிட்டது. இதனால் தேசியக் கொடி, கம்பத்தின் உச்சியில் இருந்து சுமார் 1 அடிக்கு கீழே தொங்கியபடி இருந்தது. இதனை ஆட்சியர் அலுவலகத்தில் யாரும் கவனிக்கவில்லை, சரிசெய்யவும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.