தேசம் நம்பும் மோடி அரசு

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் அரசின் மீது எந்தளவுக்கு நம்பகத்தன்மையோடு இருக்கிறார்கள் என்பதை பற்றி Organisation for Economic Co-operation and Development (OECD) என்ற அமைப்பு சர்வதேச அளவில் ஆய்வு செய்தது. இந்த அமைப்பு வெவ்வேறு நாடுகளின் பொருளாதாரம், வளர்ச்சி குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசின் வல்லமை, குடிமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற பல விஷயங்களில் மோடி அரசு சிறப்பாக செயல்படுவதாக 73.7 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  உலகத்தில் இந்தியாவில் தான் இந்தளவிற்கு மக்கள் அரசுக்கு ஆதரவளித்துள்ளனர்.

நமது பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர் என்பதற்கு இந்த ஆய்வறிக்கை மேலும் ஒரு சான்று.