துயரிலும் நீட் எழுதிய மாணவி

கடந்த ஆகஸ்ட் மாதம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் கணேசனும் அவரது மனைவி தங்கமும் இறந்தனர். இவர்களது இரு மகள்கள் ஹேமலதா, கோபிகா படிப்பிற்காக திருவனந்தபுரத்தில் இருந்ததால் உயிர் தப்பினர். பெற்றோர் மட்டுமல்லாது உறவினர்கள் 33 பேரை நிலச்சரிவில் பறிகொடுத்திருந்தனர் இவர்கள். மீளாத்துயரில் இருந்த போதும், ஹேமலதா ‘நீட்’ தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளை மூணாறு கோட்டயம் பகுதி தமிழ் சங்கத்தினர் செய்திருந்தனர்.

நீட் தேர்வு குறித்து எதிர்மறை செய்திகளை மட்டுமே எப்போதும் வெளியிட்டு, அதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் அரசியல் கட்சியினரும், பெரும்பாலான ஊடகங்களும் இதை போன்ற நேற்மறை விஷயங்களை கண்டுகொள்வதில்லை.