தி.மு.கவினரின் புதிய நாடகம்

தேர்தல் பயத்தால், சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கையில் வேலுடன், ‘போஸ்’ கொடுத்தார். அவரது கட்சியினரும், ஆங்காங்கே கோயில்களில் நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகின்றனர். அவ்வகையில், கோவை, கவுண்டம்பாளையம், மீனாட்சி அம்மன் நகரில், பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தி.மு.கவினர் பனியன் வழங்கினர். அதில், ஹிந்து கடவுள்களை யும் ஹிந்துமத சம்பிரதாயங்களையும் கொச்சைப்படுத்தும் தி.மு.க குடும்பத்தினரான கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, கோவை மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தி.மு.கவின் இந்த தேர்தல் நாடகத்தை சமூக வலைத்தளங்களில் மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.