திருவெம்பாவை 17

நமக்கெங்கும் கிடைக்காத பேரின்பத்தை சிவபிரான் ஒருவனால்தான் வாரிவழங்க முடியும் என்கிற ஒரே நம்பிக்கையுடன் நீராடப் புகுகின்றனர் பெண்கள். “செந்தாமரைக் கண்ணனான நாராயணன், நான்முகனான பிரம்மா மற்றும் பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காணத் தயாராவோம்.”என்கின்றனர் தோழிமார்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி