திருப்பாவை – பாசுரம் 9

உலகம், உயிர்ப்பொருட்கள் அனைத்துக்கும் முன்னேயான பரம்பொருளே!இன்றைக்கும் இனி என்றைக்கும் வரப்போகிற புதுமைகளுக்கு எல்லாம் புதுமையாக விளங்கும் தன்மை பொருந்திய குணங்களைத் தன்னகத்தே கொண்ட பெருமை வாய்ந்தவனே!

அவனையே தலைவனாகக் கொண்ட அவனது அடியவர்களுக்கும் அடியார்களாக அவர்தம் தாள் பணிவோம் எனக்கூறும் தோழிகள் – “அந்த அடியார்களை மட்டுமே நாங்கள் திருமணம் செய்து கொள்வோம். அவர் உகந்து சொல்வதற்கு ஏற்றாற்போல அவர்களது கடைக்கண் குறிப்புக்கு அடிபணிந்து தொண்டு செய்து இன்புறுவோம். இவ்வாறு அமையும் நற் பாக்கியத்தைத் எங்களுக்கு அருளினால், வேறு என்ன குறை இருக்கப் போகிறது எங்களுக்கு??இப்படிச் சொல்லிப் பாடுவோம் எழுந்து,” என்கிறார்கள்.

இறைவனை அடைய எளிய வழி, அவனுடைய அடியார்க்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்துத் தொண்டு செய்வதுவே.அதுவே ஆண்டவனைப் பணிவதாகும்.

ஆர்.கிருஷ்ணமூர்த்தி.