திருப்பள்ளியெழுச்சி 4

ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்; ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்; ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்; ஒரு பக்கம், தொழுவார்களும், அன்பின் மிகுதியால் அழுவார்களும், விடாது அழுது துவண்ட கைகளை உடையவர்களும்; ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்…

திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே! இவர்களோடு சேர்த்து என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க! என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.

ஆர். கிருஷ்ணமுர்த்தி