திராவிட மாடல் ஆட்சிக்கு அபாய மணி அடிப்போம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி எப்போது வைப்பர் என, மக்கள் ஆர்வமாக உள்ளனர். ‘முடியல, விடியல’ என மக்களின் குரல் தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல் தாண்டவமாடி கொண்டிருக்கிறது.

அமைச்சர் உதயநிதி சனாதன தர்மத்தை, ஹிந்து தர்மத்தை அழிக்க போவதாக கிளம்பியிருக்கிறார். ஆனால், பிரதமரோ ஏழை என்ற ஜாதியை ஒழிப்போம் என கிளம்பியிருக்கிறார். இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தை குடிகார நாடாக மாற்றிவிட்டனர். தமிழகத்திலே முக்கிய அமைச்சர்கள் சாராய ஆலைகளை நடத்தி வருகின்றனர். நீலகிரி எம்.பி., ராஜாவை நீங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தையொட்டி மூன்று அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் ஈரோட்டிற்கு என்ன செய்தனர்; மக்கள் எத்தனை நாளைக்கு கண்ணீர் வடிப்பர்? கூடிய விரைவில் திராவிட மாடல் ஆட்சிக்கு அபாய மணி அடிப்போம்