திசை திருப்ப திருமாவின் உக்தி

மனுநீதியில் பெண்களை குறித்து தவறாக கூறப்பட்டுள்ளதாக கூறி சர்ச்சையில் சிக்கினார் திருமாவளவன். அவர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவரை கைது செய்ய போராட்டங்களும் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ஹிந்து மக்கள் கட்சியின் நிர்வாகி மணிகண்ட பிரபுவை விடுதலை சிறுத்தை கட்சி ரவுடிகள் சிலர் இரும்பு தடிகளால் அடித்தும், குத்தியும் உள்ளனர். இதனால் பலத்த காயமுற்ற அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இருவரை கைது செய்துள்ளனர்.

இந்த அராஜகம் திருமாவளவனின் மீதான மக்கள் கவனத்தை திசை திருப்பவா அல்லது அவர்களின் ஹிந்துக்கள் மீதான துவேஷத்தை பறைசாற்றவா?