தாவூத் கூட்டாளிகள் கைது

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் இருவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) கைது செய்துள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரிப் ஷேக் மற்றும் ஷபீர் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ள இவர்கள் இருவரும் மே 20 வரை என்.ஐ.ஏ காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ‘குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளிகள், இவர்கள் இருவரும் தாவூதின் ‘டி’ கம்பெனியில் பணிபுரிந்தவர்கள், இன்னும் செயலில் இருப்பவர்கள். சில பயங்கரவாத அமைப்புகளின் உதவியுடன் பாரதத்தின் முக்கிய நகரங்களில் சதி திட்டங்களை அரங்கேற்றவும், வன்முறையை நிகழ்த்தவும் தாவூத்தின் ‘டி’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சில அரசியல்வாதிகளை இவர்கள் இலக்கு வைத்துள்ளனர். பணமோசடி பெரிய அளவில் நடந்துள்ளது. இவற்றை நடத்துவதற்காக சோட்டா ஷகீல் பணம் அனுப்பியுள்ளார்’ என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஐந்து லட்ச ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.