தாக்கியவர்களுக்கும் மரியாதை

விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் விவசாய சீர்திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்களால் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் தாக்கப்பட்டார். புத்தகங்களை கிழித்து அவரின் மீது எறிந்து அநாகரீகமாக நடந்தனர். ஒழுங்கீன நடவடிக்கையால் இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து எட்டு பேரும் காந்தி சிலை முன் தர்ணா செய்தனர். தன்னை தாக்கிய இவர்களுக்கு பெரிய மனதுடன் காலையில் சூடான தேநீர் கொடுத்து உபசரித்தார் ஹரிவன்ஷ். பிரதமர் உட்பட அனைவரும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல் – திருக்குறள்