டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காவலர்கள்

பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிப்பை நவீனப்படுத்தும் விதமாக மத்திய மண்டல காவல் தலைவர் அமுல்ராஜ், துணை தலைவர் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் ஜியாஹுல்ஹக் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சு.குத்தாலிங்கம், மணப்பாறை காவல் ஆய்வாளர் கண்ணதாசன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேல் ஆகியோர் டிரோன் கேமராக்களை நகர் பகுதியில் பறக்கவிட்டு அத்தியாவசிய தேவைகளின்றி இருக்கும் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு மைதானங்களில் சுற்றித் திரியும் இளைஞர்கள் டிரோன் கேமாரக்களை கண்டதும் அங்கிருந்து வீடுகளை நோக்கி ஓட்டம் எடுத்தனர்.