ஜி.எஸ்.டி செலுத்துவோருக்கு லாட்டரி

ஜி.எஸ்.டி. செலுத்தும் நுகர்வோர்களுக்கு லாட்டரி முறையில் பரிசு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.டி. செலுத்துவதில் இருக்கும் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று நிதித்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்படி, ஜிஎஸ்டி செலுத்திய ரசீது நகலை அதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்படும் இணையதளத்தில் அல்லது செயலியில் நுகர்வோர்கள் பதிவு செய்ய வேண்டும். பதிவேற்றப்படும் நுகர்வோரின் ரசீதுகள் தானியங்கி முறையில் குலுக்கப்படும். நுகர்வோர் பதிவு செய்யும் செல்போன் எண், ரிசீதின் எண், ஜிஎஸ்டி எண் ஆகியவற்றைக் கொண்டு லாட்டரி முறையில் தினந்தோறும் மற்றும் மாதந்தோறும் குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நுகர்வோரிடம் இருந்து ஜிஎஸ்டி வசூலித்துவிட்டு, அதனை செலுத்தாத வர்த்தகர்களும் பிடிபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.