ஜமாத்தின் உத்தரவு

விவசாயிகள் போராட்டத்தை ஒட்டி, கடந்த டிசம்பர் 8ல் நடைபெற்ற ‘பாரத் பந்த்’ மக்களின் ஆதரவின்மையால் தோல்வியடைந்தது. அதில் முஸ்லிம்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். கடைகளை திறக்கக்கூடாது என ஜமாத் உத்தரவு பிறப்பித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வளைத்தளங்களில் பரவி வருகிறது. இதேபோல, லால்பேட்டை ஜமாத் கடந்த 15-.03.-2020ல் வெளியிட்ட அறிவிப்பில், சி.ஏ.ஏவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முஸ்லிம்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து விட வேண்டும் என சொல்லப் பட்டது குறிப்பிடத்தக்கது.