சூரப்பாவுக்கு ஆசிரியர் கூட்டமைப்பு ஆதரவு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நேர்மையானவர் என்று அவர் மீதான புகார்களை விசாரிக்கும் முன்னால் நீதிபதி கலையரசனுக்கு ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது. ”பல்கலைக்கழக நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வந்தவர் சூரப்பா” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதர்மம் நடக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக மௌனம் காப்பது நடக்கும் அதர்மத்திற்கு துணைபோவதற்கு சமமாகும் என்பது மாகபாரதத்தில் சொல்லும் நீதி. அதனால் சூரப்பா மீதான வன்ம தாக்குதலை நாம் கைகட்டி வாய்பொத்தி அமைதியாக இருக்க கூடாது என்பதை ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு செய்தது வரவேற்கத்தக்கது. மேலும் நம்முடைய ஆதரவை நாம் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.