சாதுக்கள் மர்ம மரணம்

உத்தரபிரதேசத்தில் உள்ள கிரிஜா வாதிகா ஆசிரமத்தில் மூன்று சாதுக்கள் தேனீர் தயாரித்து குடித்துள்ளனர். இதில் குலாப் சிங், ஷ்யாம் சுந்தர் தாஸ் ஆகிய இரு சாதுக்கள் மரணமடைந்துள்ளனர். ராம்பாபுதாஸ் என்ற மூன்றாவது சாது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதன் பின்னணியில் எதாவது சதி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதை குறித்து உத்தரபிரதேச காவல்துறை விசாரித்து வருகிறது.
ஸ்ரீ கிருஷ்ண  ஜன்ம பூமி சுரக்ஷா நியாஸ் கமிட்டியின் தலைவர் ஆச்சார்ய தேவ் முராரி இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்